Friday, August 26, 2016

பகல்தூக்கத்திலும் என் கனவில் வருகிறீர்கள்



இரவுக்காகக் காத்திருக்காத
பாவனையன்றி
வேறொன்றும் நான் செய்வதற்கில்லை
ஒரு ஆட்டோ பிடித்தாவது
வீடுபோய்ச் சேருங்கள்
வெயில் கொளுத்துகிறது






(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

No comments: