Tuesday, April 29, 2008

E.E. Cummings in Tamil (poem 1)

உணரட்டுமா என்றான் அவன்


(உணரட்டுமா என்றான் அவன்
எவ்வளவு என்றாள் அவள்
நிறைய என்றான் அவன்)
ஏன் கூடாது என்றாள் அவள்

(வாயேன் என்றான் அவன்
ரொம்ப தூரம் வேண்டாம் என்றாள் அவள்
எது ரொம்ப என்றான் அவன்
நீ இருக்குமிடம் என்றாள் அவள்)

இருக்கட்டுமா என்றான் அவன்
(எப்படி என்றாள் அவள்
இதைப்போலத்தான் என்றான் அவன்
நீ முத்தமிட்டால் என்றாள் அவள்

நகரட்டுமா என்றான் அவன்
இது காதலேதான் என்றாள் அவள்)
நீ விரும்பினால்தான் என்றான் அவன்
(ஆனால் என்னைக் கொல்கிறாய் என்றாள் அவள்

என்றாலும் இது வாழ்க்கை என்றான் அவன்
ஆனாலும் உன் மனைவி என்றாள் அவள்
இப்போதே என்றான் அவன்)
ஒ..ஓ என்றாள் அவள்

(டிப்...டாப்...இது அவன்
நின்றுவிடாதே இது அவள்
இல்லை இது அவன்)
மெதுவாக இது அவள்

(வர...வா? என்றான் அவன்
உம்...ம் என்றாள் அவள்
அருமையடி நீ என்றான் அவன்
என்னுடையவன் நீ என்றாள் அவள்)

1 comment:

N A V ! N said...

Superb... nice collectiones....cool blog..