Tuesday, September 16, 2008

ஏன் புதுப்பதிவுகள் இல்லை?

ஏன் புதுப்பதிவுகள் இல்லை என்று நண்பர்கள் சிலர் எழுதிக்கேட்டிருக்கிறார்கள். உண்மையில், எழுத நிறைய இருக்கின்றன. ஹெலன் சிக்ஸுஸ் கட்டுரை ஒன்றை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். சில கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனால், இன்னும் சிலபல நாட்களுக்கு பதிவில் கவனம் செலுத்தமுடியாது போலிருக்கிறது. இப்போது என் ஆய்வின் இறுதிப்பகுதிகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். டிசம்பருக்குள் முதல்பிரதியை முடித்தாக வேண்டும். என்னுடைய பிரச்சினை என்னவென்றால் தமிழில் எழுதும்போது ஆங்கிலத்திலும் எழுதநேர்ந்தால் தமிழாக ஆங்கிலத்தை எழுதுவது போலாகிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், இருமொழிகளிலுமே நன்றாக மொழிதல், வெளிப்படுத்தல் போன்றவை குறித்த பயமும் வந்துவிடுகிறது. அதனால், என் பதிவை வாசிக்கும் நண்பர்கள் சில மாதங்களுக்கு பொறுத்து அருளுங்கள். திரும்பவும் சீக்கிரம் வருவேன். நன்றி.

No comments: