Monday, July 14, 2008

சில கவிதைகள் (1997)

அண்டசராசரம்

மடிப்புள் மாம்ச
வெயில் விரித்தெனைக்
கொத்தும் தனிமையோர்
காகம்.


*******

ஒரு செந்நிறப் பள்ளத்தாக்கு அழுகை
ஒளிபுகா
பனி சுமந்து இறுகிக்கிடப்பன
வெட்கம் ஒரு மருங்கு
நிந்தை மற்றொன்று
கடந்தும் ஏதோவொன்றின்
ஆவியாகித் தொலைய வான்நோக்கி
நீலம் மறைக்கும் வெட்டுக்கிளி மந்தை.
அப்போது காற்று புகா
மண்டிக்கிடப்போம் தழைகளின் ஈரவாடையோடு
சுடுமூச்சுகளின் நாசி சிகப்புப்புதர்
கெக்கலிக்கும் விளையாட்டுச்சிறுமிகள் போலும்
அலைந்து செல்லும்
அந்நியரின் கரு ஆறு உடல்கள் மேலே
திரும்ப அவர் குரல் திரும்ப
சுட்டும் அதன் முனை அநாதி காலம்
மிகப்பழையன சுவைமொட்டுகள்
இறைத்த யாரோ ஏக்கங்களின்
அசையொலி நாம் பாறைகளூடே
கசியும் பிளவுகள்

எதிரே ஆழத்தின் சிகப்பருவி வெகு உறவு
எப்போதைக்குமாய் வீழ எண்ணி கடந்தவண்ணம்.


*****

சப்தம்
குளம்புகள் மழலைகளின்
யார்
வெகுதூரம் புவிகடக்க
சுற்றமும் உற்றாரும்
சாரதிக்க
யாழினித்து மரிக்கும்
தேயும் அடிகளின்
செம்மையுறும்.

வளர்ந்தோம்.

******

("தீயுறைத்தூக்கம்" விருட்சம்-ஸஹானா வெளியீடு, 1997)

No comments: