Wednesday, July 16, 2008

பறவை பாம்பான கதை

அறியாமையின் பெருவெளி
சிறகடிக்கத் தூண்டியது.
அவநம்பிக்கையின் ஒரு கல்
பறத்தலை ஊர்தலாக்கியது.

3 comments:

ராஜா சந்திரசேகர் said...

பல முறைப் படித்தேன்.

கோநா said...

பெருந்தேவி, எங்கிருந்து எறியப்பட்ட கல் என்பது பிரதியில்:) :) குறிப்பிடப் படவில்லை எனில் கல் உள்ளிருந்து வந்து தாக்கியதாகவும் இருக்கலாம் அல்லது வெளியே இருந்து (பிறரால்) எறியப்பட்டதாகவும் இருக்கலாம் எனினும் உங்கள் எல்லா கவிதைகளும் இப்பறவை பிறரால் எறியப்பட்ட கற்களுக்குச் சிக்காமல் லாவகமாய் பறக்கத் தெரிந்தது என்று உறுதியாய்த் சொல்வதால் இது உள்ளிருந்து தாக்கிய கல் என்பதே உங்களு(பறவை)க்கு அதிகம் பொருந்துகிறது.

கோநா said...

பெருந்தேவி, அதிகப் பிரசங்கித்தனம் போன்ற இக்கருத்துக்கு மன்னிக்கவும். "பறத்தலை ஊர்தலாகியது " இவ்வரி கவிதையின் உணர்வை கட்டுரைப் படுத்துவது போல் எனக்குத் தோன்றுகிறது. பதிலாக இப்படி முடிய ஆசைப்படுகிறேன்.

அறியாமையின் பெருவெளி
சிறகடிக்கத் தூண்டியது.
அவநம்பிக்கையின் ஒரு கல்
சிறகொடித்துத் துண்டித்தது.