Thursday, July 17, 2008

கவிஞன்

அரங்கத்தின் மேடைக்கு
அழைக்கப்படுமுன்
தன்னைக் கேட்டுக்கொள்கிறான்
இன்று எப்படி எழுதப் போகிறேன்
இங்கிருந்து வெளிசெல்லும் வழி எங்கே
கேள்விகளை
யோசிக்கும்போதே
கையில் பிடித்த
பாம்பாகிறது
ஒலிபெருக்கி.

இளவெயிலில்
அலையும் முடிக்கற்றைகள்
கவிதைகளின் மகுடியை இசைக்கின்றன.
அவனைக்
காப்பாற்றப்போகும் கருணை
விரல்களுக்குத்
திரும்பத்தரப்படுகிறது
அவனுக்குப் புலப்படாமலே.

No comments: