Wednesday, June 11, 2008

எதிர்

செல்போன்
ஒளித்திரையில்
உருண்டோடுகிற
நாளைகளின்
அடுத்த வாரங்களின்
மாதங்களின்
அழைப்புகளை
எடுத்துப் பேசிவிட்டேன்.
இனித்து அலுக்கிறது நாவில்
இருவருடங்கள்
கழித்து நடக்கப்போகும்
காதணிவிழா ஒன்றின்
பூந்தித்துகள்.
ஒரு நரைமுடி நீண்டு
இறுகக் கட்டுகிறது
என்
நெஞ்சு நின்றுபோகிறது
நேற்று.

No comments: