Monday, June 30, 2008

அவநம்பிக்கையின் பிரதி

பொங்கியது கடல்
கண்ணகியை எடுத்ததால்
என்றான் நண்பன் ஸ்டெல்லா
ப்ரூஸ்
உருகிய
வெல்லப்பாகு நிலத்தில்
ஆற்றாமையின் கரும்பாம்புகள்
எழும்புகின்றன
ஊழி முதல்வன்
உருவம்போல் மெய்கருத்த
ஆழிப்பேரலை
என்றவனும் ப்ரூஸ்
தொங்கும் முன்
ஆழி போல் மின்னி
வலமும் புறமும்
நினைத்திருப்பானா
ஒவ்வொரு
நில
நடுக்கமும்
இப்போது
நெஞ்சில் தெறிக்க
அன்றும்
ப்ரூஸ்
மகிழ்ந்தேலோவை
மறந்தே போனான்.

No comments: