Wednesday, June 11, 2008

வேண்டுதல்

விண்மீன்கள்
அல்லிகளாய் போதவிழும்
இரவில்
எம் தேவமாதாவே
உன் ஒளிர்க்
கன்னமதாய்
அமைதி சிறிதே
காட்டித்தாரும்.
விம்மிவிம்மி நெஞ்சம்
உறைகிற
தன்னுணர்வை
மெழுகுவர்த்திக்கு
இணையாக்கி
உருக்கித்தாரும்.
சுகங்களின் கிளிஞ்சல்கள்
கனவில்
எம் பாதங்களைக்
கிழிக்காதிருக்கட்டும்.
துயரங்களை ஆண்டடக்கிய தாயே
மகனுக்கு உண்டானதை
மகளுக்குத் தாராதேயும்.
இதயமுனதில்
ஏந்திய அம்புகளை
வாரத்தின் நாட்களாக்கிக்கொண்டோம்.
இரவுக்கும் விசனத்தை ஊட்டாதேயும்.
அல்லது
இப்போது
கதவெமதைத் தட்டுவது
ஊழ்வினையல்ல
என்ற உத்திரவாதத்தையாவது தாரும்.

No comments: