Saturday, June 28, 2008

ஏன் ஏன்

ஒன்றும் வேண்டாம்
ஊர் அடங்கிவிட்டது
கூண்டில் நின்றுகொண்டே
உறங்குகிறது கிளி.
திரும்பிப் படுக்காத அவளது
படுக்கையின்
இந்தப்பக்கம்
அவள் கடந்துவந்த
பாதை போலும்.
அறையெங்கும்
கடவுளின் கண்ணாய்
கணினியின் ஒளித்திரை
பச்சைச் சிறுதுளி
மின்னி அருளுகிறது
ஏன் ஏன் கைவிட்டீர்
ஒரு துளி
கண்ணீரை
நாளை அவளுக்குத் தாரும்.

No comments: