Wednesday, June 11, 2008

உன்மத்தமே

,
உன் கால் கொலுசாக
என்னை அணியும் முன்
சில வார்த்தை,
ரோஜா நிறத்தின் என் வாந்தியை
முதலில்
நீ நிறுத்துக.
உன் சன்னிதியில்
என் கணனியின் கடவுச்சொல்
யாரையும் காட்டிக்
கொடுக்காதிருக்கட்டும்.
ஒருபோதும்
நினைவூட்டல்களுக்கு
ஆளாகாத
பெயர்களில் ஒன்றாக
சாம்பலின் அடிவாரத்தில்
நான்
உறங்கும் வரமும் கொடு
நீ ஆடி முடித்தபின்.

2 comments:

Jayaprakash Sampath said...

அடேங்கப்பா....

Perundevi said...

அப்படியென்றால் என்ன?