Saturday, June 28, 2008

என்ன பருவம் இது

பூப்பே யில்லாது
போனது வசந்தம்
என்று நீ வருந்தாதே
மனிதர்களுக்காக
என்றுமே இல்லை
பொல்லாத காலம்.
பனிப்பொழுதில் அறிந்தேன் இதை.
பொம்மை
செய்யக் குவித்திட்ட பனியை
அறிவிக்காத சூரியன்
குதித்து உருக்கிவிட்டான்.
வழிப்போக்கர்களுக்கு மட்டும்
பாதியாவது கருணை காட்டுகிறது
பருவம்
வாழ்வைப்போலவே
என்பதால்
குதூகலத்தின் நிரந்திர மாளிகை
எதையும் எழுப்பாதே.
பருவமற்ற பருவத்தில்
வலி தராது
உயிரை வாங்கும்
விபத்து ஒரு மிடறு அருந்த
உன் தண்ணீர் பாட்டில்
எப்போதும் நிரம்பியிருக்கட்டும்.
உனக்குமுன் ஓடட்டும்
உன் கால்சராய்.

No comments: