Monday, June 9, 2008

வேறு இனங்கள்

தடுக்கி விழுந்தாயிற்று
தரையானால்தான் என்ன?
ஆயிரம் வேலைகளுக்கு
நடுவிலும்
உன் தாய்
சொட்டுக் கண்ணீராவது
சிந்திக்கொண்டு வரவேண்டும்.
வெகுதூரத்தின்
விண்மீன்களின்
கூட்டம்
கலைந்துவிட்டது
சத்தம்கேட்டு.
கடமைபேணும்
உன் தாயை
ஏன் காணவில்லை இன்னமும்?
என் முலைகள் சொரிகிற
பாலினின்று
பீறிட்டெழுகின்றன
பெரும்புற்றுகள்.
அழுதுகொண்டோடி நீ
வந்தாலும்
விலகியே நடப்பேன்.

No comments: