Tuesday, September 16, 2008

இருட்டில் பிள்ளைபெறுபவன்

(எரிகா யுங்-ன் கவிதை)

இருட்டில் பிள்ளைபெறும் மனிதன்
இறந்துபடுகிறான்
மீண்டும்
வாழ்வுக்குத் திரும்புகிறான்

தன் கரங்களை விரிக்கிறான்
இருட்டில்
உகப்பான பிசாசுகளை
அணைப்பதுபோல

அவன் இருதயம் நிற்கிறது
துவங்குகிறது
மீண்டும்
அவன் மன்னிக்கப்படுகிறான்

எதற்காகவும் இல்லாமல்.
என் தந்தை
யவன்
இருட்டைப் பெண்பிள்ளைகளாகச்
செய்பவன்.

No comments: