Friday, April 16, 2010

கேத்தே ஏகர்

புலனற்றவர்(வை)களின் சாம்ராச்சியம் (Empire of the Senseless)

V அல்ஜீரியர்கள் பாரிஸை எடுத்துக்கொள்ளட்டும்

(அபோர் பேசுகிறாள்)

என் அம்மா------------------------------------------------------------------

நான் ஓடிப்போனேன். திவை-யிடமிருந்து (திவை அபோரின் நண்பர்) மட்டுமல்ல, ஓடிப்போவதற்கு எந்த ஒரு இடமேனும் இருக்குமானால் அங்கே ஓடிப்போயிருப்பேன். ஆனால் அப்படியெதுவுமில்லை. வீடு என்ற ஒன்று எங்குமில்லை என்பது எனக்குத் தெரியும் என்பதும் எனக்குத் தெரிந்தது. எங்கேயுமில்லை;

புகலிடம் என்பது ஒரு நிரந்தரமான நிலைமை. ஒரு நிரந்தரமான சமூகம். உறவுகளிலும் சரி, மொழியிலும் சரி.

அடையாளத்தின் அடிப்படையில். ஆனால் எதிலிருந்து அடையாளம் புறம்தள்ளப்பட்டது?

ஒருவேளை இந்தச் சமுதாயம் தன் அழிவுகளிலிருந்து தன் சாதலை வாழ்கிறது போலும், ஆனால் எனக்கு இதைப்பற்றி அறிய எந்த வழியும் இருந்திருக்கவில்லை.

எனக்குத் தெரியாத, நான் அன்னியளாக இல்லாத இடமொன்றில் என்னை நான் கண்டேன். பாரிஸின் ஒரு பழைய பகுதி, பிற பகுதிகளைப்போல, எப்போதுமே எதுவுமே நடக்காத லண்டனைப் போலில்லாமல், ஏதாவது நடந்துகொண்டிருக்கும் இடம், மற்ற எல்லா இடங்களையும்போல.

பாரிஸில் ஏழையாக வாழ்தல் எளிது, பணம் இருந்தால். ஒரு புகைப்படக்காரரின் மாடலாக இருந்து என் ஆடம்பரத்தேவைகளுக்கான போதுமான பணத்தை சம்பாதித்தேன். என் உடலை வைத்து ஈட்டிய பணத்தில் வாங்கிய விலையுயர்ந்த உடைகளை, ஆண்கள் புகைப்படம் எடுப்பதற்காகக் கழற்றினேன்.

ஒரு நாள், யூதர்களின் குடியிருப்புக்கு அருகே ஒரு குறுகிய வளைந்த சந்தில், செங்கல்களால் கட்டப்பட்ட வீடொன்றின் அடித்தளத்தின் தொழில்நிமித்தமாக நான் இருக்கக் கண்டேன். எடைகளைத் தூக்கிக்கொண்டிருந்த ஒரு கருப்பு மனிதன் எனக்காகக் கதவைத் திறந்தான். அவனது ஸ்டூடியோ தேவையான கருவிகளோடு இருந்தது. புகைப்பட விளக்குகள், மற்ற உபகரணங்கள். சீட்டுக்கட்டு விளையாட்டின் சீட்டுகளின் பின்பக்கத்துப் படங்களுக்காக போஸ் கொடுக்க என்னை வேலைக்கு அமர்த்தியிருப்பதாகச் சொன்னான். ராசி மண்டலத்தில் இருக்கும் பன்னிரெண்டு ராசிகள் ஒவ்வொன்றுக்குமாக பன்னிரெண்டு புணர்ச்சி நிலைகளில் நான் போஸ் கொடுக்க வேண்டும். என்ன போஸ்களோ அவை.

“பொதுவாக என் ஆண் நண்பனோடுதான் வேலையைச் செய்வது வழக்கம்.” எனக்கு ஆண் நண்பன் எவனும் இல்லை என்பது வேறு.

”இல்லை, உன்னுடைய யோனி, என்னுடைய குறி.” முன் கதவை மூடுவதற்காக அவன் குறியை என்னிடமிருந்து அகற்றியபடி சென்றான். ”உன் உடைகளைக் கழற்று.” கேமராவுக்காக நீண்டது அவன் கை.

என் உடைகளைக் கழற்றிவிட்டுப் படுத்தேன். “இது சரியாக நடக்கப்போவதில்லை.” அவன் தன் ஒளிர்சாம்பல் நிறக் காலாடையை ஒருகையால் கழட்டியபடி இன்னொருகையால் கேமராவைப் பிடித்துக்கொண்டிருந்தான்.

“எனக்கு கொனோரியா இருக்கிறது.”

“நான் காண்டம் உபயோகிக்கிறேன்.”

சடுதியில், செத்த அல்லது சிதைக்கப்பட்ட உடலைவிடவும் ஒரு வன்புணரப்பட்ட உடலை நான் தேர்ந்தெடுத்தேன்.

பயனற்ற, அதை விடவும், வீரியமான, அழிவுசக்தியான எதிர்பாலியல் புணர்ச்சி என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த நோயை நான் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. எப்போதுமே அது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

அதன்பின்பு நான் துறவுபற்றி யோசித்தேன். பெரும்பாலான பாலியல் செயல்பாடு உடல்நோயையும் ஏன் மரணத்தையும் கூட இப்பொழுதெல்லாம் தந்ததால், பாரிஸில் என் சில நண்பர்கள் புணர்வதை நிறுத்தியிருந்தார்கள். எதிர்பாலியல் செயல்பாட்டிலிருந்த என் ஒரே நண்பன் இப்போது துறவியாக இருந்தான். ஐந்து வருடங்களுக்கு முன்பு, சமூகத்தின் ஏணிப்படியில் வெகுவேகமாக ஏறிக்கொண்டிருந்த மாடல் ஒருத்தியோடு அவன் உறவில் இருந்தான். அவளோ அவனுக்குத் தெரியாமல் ஆண்களோடும் பெண்களோடும் படுத்துக்கொண்டிருந்தாள். அவனை அவள் பொதுவெளியில் அவமானப்படுத்தியதை அவன் அறிவான். அவன் முகம் பலநேரங்களில் மிதிக்கப்பட்டது. சாவின் தாங்கொணாத வலி அந்த வலிக்கான காரணத்தை, அவன் பாலியலை, துறக்கச் செய்தது. அவன் ரொமாண்டிக் ஆன ஆளாக இருந்ததால், தன்னுடைய பாலின்ப உச்சம் அல்லது தன்னுடைய பாலியல் அடையாளத்தைத் துறப்பது—இந்த இரண்டில் ஒன்றுக்கு உண்மையாக இருப்பதைத் தேர்ந்தெடுத்தான்.

ஆனால் அன்றைய நாட்களில், வலதுசாரிகள் அரசியல் திருப்புமுனை கண்ட, சாவின் அன்றைய நாட்களில், வெள்ளையாக இல்லாத ஒன்றோ ஒருவனோ தான் ரட்சகனாக இருக்கமுடியும் என்று தோன்றிய அந்த நாட்களில்……. உடல், பொருண்மை, அதுவே பொருட்படவேண்டும் என்று தோன்றியது. எனக்கு என் உடல் பொருட்படுவதாக வேண்டும். என் உடல் எனக்குப் பொருட்பட்டால், பிறகு எதுவும் எந்தப் பிரதியாகவும் இருக்கும். துறவை என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை.

....



(ஏகர்-இன் எழுத்திலிருந்து இரு பக்கங்கள் இவை)

No comments: