Saturday, April 26, 2008

தனி-யின் பாலை

தனி-யின் பாலை


நேற்றைய நானுக்கும்
இன்றைய நானுக்குமாக
அரவுப்பாதை.
கால்கள் தப்ப
எண்ணம் கிறுகிறுக்க
இப்பக்கம் அப்பக்கம்
பரிதவித்து
நினைவு நழுவையிலே
ஆத்மாநாமின் கவிதையின்
சாதம் உண்டு
கொழுத்த பித்ருகாகம்
"இல்லை இல்லை
நான் என்ற நீ"
என்றுகதறிக் கரைந்து
அரவுப்பாதையைக்
கொத்திச்சென்றது.
மிச்சமில்லாத
இடத்தில்
நின்ற ஒரு நான்
நாளை.

No comments: