Sunday, June 13, 2010

உன் இதயத்தை என்னோடு சுமந்து செல்கிறேன்: E.E. Cummings (9)

உன் இதயத்தை என்னோடு சுமந்து செல்கிறேன் (என் இதயத்தில்
அதைச் சுமந்து செல்கிறேன்) அது இல்லாமல் நானில்லை எப்போதும்
(எங்கே நான் சென்றாலும் நீயும் செல்கிறாய், என் அன்பே; எது
என்னால்மட்டும் செய்யப்படுகிறதோ அது உன் செயலே என் கண்ணே)
நான் அஞ்சுவதில்லை
விதிக்கு (ஏனெனில், நீ என் விதி, என் கற்கண்டே) வேண்டாமெனக்கு
எவ்வுலகமும் (ஏனெனில் அழகே நீயே என் உலகம், என் உண்மை)
ஒரு நிலவு எதையெல்லாம் எப்போதும் குறித்திருக்கிறதோ அது நீயே
ஒரு கதிர் எதையெல்லாம் எப்போதும் பாடுமோ அதுவும் நீயே

ஒருவருமறியாத ஆழ்ரகசியம் இங்குதான்
(வேரின் வேரும் இங்குதான், மொட்டின் மொட்டும்
ஆன்மா நம்பமுடிவதையும் மனம் மறைக்க முடிவதையும் தாண்டி வளரும்
வாழ்வென்று அழைக்கப்படும் மரத்துடைய வானின் வானும்)
இவ்வதிசயமே நட்சத்திரங்களைப் பிரித்துவைத்திருப்பதும்

உன் இதயத்தை நான் சுமந்துசெல்கிறேன் (என் இதயத்தில் அதைச் சுமந்து செல்கிறேன்)

No comments: