Sunday, August 17, 2008

ஆடியற்ற ஆடியில்

தூரத்தே
கோக்காகோலா பாட்டில்
தன் விளம்பரப்பலகை
க்குள்ளேயே ஆடிக்
கொட்டிவிட்டது.
மோனித்த வெளியில்
ஆளற்ற
ஒற்றைக்கட்டில்
காற்றைக்
கேட்கிறது.

4 comments:

anujanya said...

ஆடியின் காற்றையும், ஆடியின் நிமித்தம் பிரிந்தவர்களையும் சொல்கிறதோ. நான் அப்படிப் புரிந்து கொள்கிறேன்.

அனுஜன்யா

Perundevi said...

ஆடி ஒரு குறியீடாக இக்கவிதையில் பயன்பட்டிருந்தாலும், கவிதை ஆடியிலன்றிப் பிரிந்தவர்களுக்காகவும்தான். ஆடியிலன்றியும் அடிக்கும் காற்றில் கொட்டிப்போகும் கொக்கோ கோலாவுக்கும்தான்.

கோநா said...

பெருந்தேவி, (யாருடைய?)பிரிவில் காற்றுடன் ஆடி, கூடி உச்சியை எட்டிய கொக்கோகோலா பாட்டில் கொட்டிவிட்டது :), யாருமற்ற ஒற்றை கட்டில் காற்றைக் கேட்கிறதோ அதே போன்ற ஒரு உச்சத்தை தனக்கும் தருமாறு?

-இரண்டு நாட்களாய் இவ்வரிகளுடன் கண்ணாமூச்சி ஆடியதில், இன்றுதான் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு முகத்தை கண்டுபிடித்தேன்.

Perundevi said...

கோநா; //காற்றுடன் ஆடி, கூடி உச்சியை எட்டிய கொக்கோகோலா பாட்டில் கொட்டிவிட்டது //

சரிதான். ஹாஹா