Wednesday, March 9, 2016

நடை பாதை


குதித்துக் குதித்து நடந்த
நான்காம் பிறை நிலவு
நின்றது
தொடர்ந்த
நானும் நின்றேன்
இது ஒன்றும் புதிதல்ல
கையாட்டிய நத்தை,
தன்னோடு உரையாடியபடி
உருண்டுகொண்டிருந்த
எண்ணெய் டின்,
ஒரு நாள்
காணாத தெய்வத்தின் கொலுசொலி,
பின்னால் போனதெல்லாம் 
இப்படித்தான்
திரும்பிவந்துவிடுவேன்
முணுமுணுத்தபடி
"
என் கால்
என் நடை
என் சதுரம்."



(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

No comments: