Wednesday, March 9, 2016

(தனித்) துவம்


பூங்கொத்து புது நூல்கள்
அவ்வப்போது
பீர் அருந்தியபடி தடவுதல்
அவ்வப்போது
வாட்ஸ் அப் (மொக்கை)
எப்போதும்
இவையா
நம் கதைத் தருணங்கள் 
சாகசக் கப்பல் பயணம் மேற்கொள்வோம்
கப்பல் மூழ்கி கதறலோடு
தரையில் பவளப்பாறைகளைத்
தட்டுவோம் அங்கோர்
அரண்மனை நமக்காகத் திறக்கும்
அதில் ஒரு பூதம் (தமிழ்ப்படங்கள் அதற்குப் பிடிக்கும்)
சிறையில் கொடுந்துயரில் நம்மைத் தள்ளும்
அதை நான் (எப்படியோ) கொன்று
உன்னை முதுகில் சுமந்து விரைவேன்
ஆம் மேலே மேலே
திமிங்கிலம் வழிகாட்ட கடற்குதிரைகள் பாட
அலைகளின் ஆலோலத்தில்
ஆம் நீந்தி நீந்தி
கரையல்லாத கரை சேர்வோம்
நம்மைப் போலிருவர்
நம்மைக் கண்டு
அதே கப்பல் அதே பூதத்தோடு 
அதே சாகசம் செய்யும்வரை



(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

No comments: