Sunday, November 6, 2011

பூஞ்சை நெஞ்சம்

மரணத்துக்கு முன் உன் துரோகிகளையெல்லாம்
மன்னித்துவிடுவாய் என்கிற உன் நம்பிக்கை
நீயும் அப்படி மன்னிக்கப்படுவாய் என்கிற
பேராசைக்குமுன் ஒன்றுமேயில்லை.
கடைசிக் கதவத்தை
ஒரு இறைஞ்சல்
எல்லாக் கைகளோடும்
தட்டுகிறது.
அதிரமாட்டாமல் அதிர்கிறது
ஒரு தாளக்கொட்டோடு.
தொலைவில்தான்.

6 comments:

rvelkannan said...

Nice one. தொலைவில் அதிர்வதற்கே இப்படியான கவிதையா?
மிக அருமை(இந்த சொல்லை கடந்தும் கவிதை பாராட்டுக்கு உரியது )

Perundevi said...

வேல் கண்ணன். நன்றி.
தொலைவில்தான், ஆனாலும்...

anujanya said...

'இறைஞ்சலின்' கையறு நிலையை 'எல்லாக் கைகளும்' என்பதை விட சிறப்பாகச் சொல்லிவிட முடியுமா!! நல்லா இருக்கு பெருந்தேவி.

Perundevi said...

Thank you, Anujanya.

கோநா said...

பெருந்தேவி,
கதவத்தை - வார்த்தையா அல்லது கதவதை என்பதன் தட்டச்சுப் பிழையா?

Perundevi said...

கோநா, கதவம்தான். தட்டச்சுப்பிழையில்லை.