Sunday, November 27, 2011

மந்தை

காதலின் பாலத்தில் ஏறி
அந்தப்பக்கம் போய்விடலாம்
என்று சொல்லித்தான்
அழைத்துவந்தேன்.
இல்லாதபாலத்திலேறி
தொலையாததூரம்போக
என்னோடு இன்னொரு
ஆட்டுக்குட்டி.

1 comment:

Perundevi said...

எழுதும்போது “சொல்லித்தான்” இயல்பாகவந்தது. பிறகு ”எண்ணித்தான்” என்று மாற்றினேன். சிலநிமிடங்கள் கழித்து வாசித்தால் கவிதையின் சுழியே மாறிவிட்டிருந்தது. :( மீண்டும் பழைய சுருதிக்குக் கொண்டுவந்துவிட்டேன்.