Monday, July 21, 2008

E.E. Cummings (4) மேகியும் மில்லியும் மோலியும் மேயும்

மேகியும் மில்லியும் மோலியும் மேயும்
கடற்கரைக்குச் சென்றார்கள் (ஒருநாள் விளையாட)

தொல்லைகளையே நினைக்க இயலாமல் செய்த
அத்தனை இனிதாகப் பாடும் கிளிஞ்சல் ஒன்றை மேகியும் கண்டாள்

சோம்பலுற்ற ஐந்து விரல்கள் கதிர்களாக இருந்த
வழிதட்டிப் போன நட்சத்திரம் ஒன்றை நட்பாக மில்லியும் கொண்டாள்

குமிழிகளை ஊதியபடி பக்கவாட்டில் விரைந்தோடிவந்த
பயங்கரம் ஒன்றால் மோலியும் துரத்தப்பட்டாள்

வீட்டுக்கு வந்தாள் மேயும்
இந்த உலகத்தைப் போல அத்தனை சிறிதான
தனிமையைப் போல அத்தனை பெரிதான
வழவழத்த உருண்டைக் கல் ஒன்றோடு

ஏனென்றால் எதை நாம் இழந்தாலும் (ஒரு உன்னை அல்லது ஒரு என்னைப்போல)
எப்போதும் நம்மையே நாம் கண்டுபிடிக்கிறோம் கடலில்.

No comments: